அரசஞ்சண்முகனார்
௧. அரசஞ்சண்முகனார், அரசப்பபிள்ளை - பார்வதி அம்மையாரின் அருமை மகனாக 1868 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள், மதுரையை அடுத்த சோழவந்தானில் பிறந்தார்.
௨. அவர் தமது 18 ஆம் அகவையில் ‘மாலை மாற்று மாலை” என்ற நூலைப் பாடி முடித்தார்.
௩. அவர் தமது 20 ஆம் அகவையில் “ சிதம்பர விநாயகர் மாலை “ என்னும் அரிய நூலை இயற்றி, அதனைத் தமது ஆசிரியர் முன் அரங்கேற்றம் செய்தார்.
௪. 1902 ஆம் ஆண்டில், மதுரை சேதுபதி உயர் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகையில், அப்பள்ளியின் தலைமையாசிரியர் பாட அட்டவணையில் தமிழ்ப்பாட நேரத்தைக் குறைத்து ஆங்கிலப்பாட நேரத்தைக் கூட்டியதால் உள்ளம் கொதித்து, அன்றே தமது 12 ஆண்டுக்கால ஆசிரியர் பணியிலிருந்து விலகினார்.
௫. அவர் எழுதிய நூல்கள் சில:
v தொல்காப்பியப் பாயிர விருத்தி
v திருக்குறளாராய்ச்சி
v திருக்குறட் சண்முக விருத்தி
v சோழவந்தான் சிதம்பர விநாயகர் மாலை
v இன்னிசை இருநூறு
v வள்ளுவர் நேரிசை
v மீனாட்சியம்மை சந்தத் திருவடி மாலை
v திருவள்ளுவர் நேரிசை
v ஏகபாத நூற்றந்தாதி
v முருகக் கடவுள் கலம்பகம்
v நுண் பொருட் கோவை
v மதுரைச் சிலேடை
v நவமணிக் காரிகை நிகண்டு
v பஞ்ச தந்திர வெண்பா
௬. 1915 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் நாள் பெரும்புலவர் அரசஞ்சண்முகனார் தமது 47 ஆம் அகவையில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.